பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவு
Published on

பெங்களூரூ,

நாடு முழுவதும் ஓலா கேப்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, எங்கு போக வேண்டுமோ அங்கு பயணம் செய்யும் வகையில் தற்போது டாக்சி சேவைகளை உபேர், ஓலா போன்ற பல்வேறு தனியர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்கள் சேவையை நடத்தியதையடுத்து கர்நாடக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஓலா காப்ஸ் டாக்சி ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com