உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அம்மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஜம்மு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், இருவரும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்களா? என்பது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அம்மாநில மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com