கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்வு

கேரளாவில் ஒமைக்ரான் இன்று 48 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்வு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று மேலும் 48 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்ந்துள்ளது. கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் இது பற்றி கூறுகையில்,

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 33- பேர் குறைந்த ரிஸ்க் கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள். இருவர் அதிக ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்வர்கள். 9 பேர் அவர்களின் தொடர்புகள் மூலமாக ஒமைக்ரான் பாதித்தவர்கள் ஆவர். மீதமுள்ள 4 பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

புதிதாக ஒமைக்ரான் கண்டறியப்பட்ட 48-பேரில் 12 பேர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். 9 பேர் எர்ணாகுளம், 7 பேர் திரிசூர், 6 பேர் திருவனந்தபுரம், 4 பேர் கோட்டயம், 2 பேர் மலப்புரம், கொல்லம், இடுக்கி, ஆலப்புழா, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்த 528- பேரில் 365- பேர் குறைந்த ரிஸ்க் நாடுகளில் இருந்தும் 92-பேர் அதிக ரிஸ்க் நாடுகள் கொண்ட நாடுகளில் இருந்தும் வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 61 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பேர் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com