டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தடை

டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தடை
Published on

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தொண்டர்கள் யாரும் கட்சி தலைமை அலுவலகங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாமென கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதனை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கையை கெஜ்ரிவால் எடுத்து உள்ளார்.

இதனால் அக்கட்சி தொண்டர்கள், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வெற்றியை பகிர்ந்து கொண்டனர். கெஜ்ரிவாலின் உத்தரவை மீறாமல் கடைப்பிடிப்போம் என அவர்கள் கூறியுள்ளனர். எனினும், இனிப்புகளை வாங்கி அவற்றை ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைப்போம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய ஒன்றாக இடம் பிடித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com