

பெங்களூரூ
இந்தியாவில் மிகச் சுறுசுறுப்பான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்கள். இது மொபைல் பயன்பாடுகளில் வேலை நேரத்தில் பாதி நேரமாகும்.
ஆப் ஆனி என்ற நிறுவனம், உலகில் அதிகஅளவில் ஆன்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் 10 மிகப் பெரிய நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் வெளியிடப்பட்டு உள்ள தகவல்கள் வருமாறு:-
ஆன்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஜப்பான் நாட்டினர் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மொபைல் ஆப்ஸ்களை பார்ப்பதில் பொழுதை செலவிடுகிறார்கள்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதால் தினமும் 4 மணிநேரத்திற்கும் அதிகமாக மொபைல் ஆப்ஸ்களில் மூழ்கி உள்ளனர். மிக குறைந்த அளவாக 1.5 மணிநேரம் மொபைல் ஆப்சில் செலவிடுகிறார்கள். ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்களையே இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொபைல் ஷாப்பிங் ஆப்ஸ்களை மட்டும் சராசரியாக ஒரு மாதத்தில் 90 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள்.
அதே சமயம் நிதி சார்ந்த ஆப்ஸ்களை சராசரியாக 30 நிமிடங்கள் மட்டுமே ஒரு மாதத்திற்கு இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். நிதி ஆப்ஸ்களை பிரேசில் நாட்டினர் 45 நிமிடங்களும், தென் கொரியா நாட்டினர் 60 நிமிடங்களும் பயன்படுத்துகிறார்கள்.