திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.92 கோடி

இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.92 கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 874 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 302 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கை யாக ரூ.4 கோடியே 92 லட்சம் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com