திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி

இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 879 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 25 ஆயிரத்து 520 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 19 லட்சம் ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com