திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.28 கோடி

24 ஆயிரத்து 435 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.28 கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 632 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24 ஆயிரத்து 435 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 28 லட்சம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com