வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் மாதம் வரை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு

வெங்காய ஏற்றுமதிக்கான தடையில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் மாதம் வரை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 31-ந்தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி மார்ச் 31-ந்தேதி வரை தடை தொடரும் என்றும் மத்திய அரசின் நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோருக்கு நியாயமான விலையிலும், போதுமான அளவிலும் உள்நாட்டிலேயே வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com