'ஆபரேஷன் கங்கா' - ஹங்கேரியிலிருந்து இருந்து 160 இந்தியர்களுடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்..!!

ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் உக்ரைனில் சிக்கித் தவித்த 160 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது.
Image Courtesy: ANI Twitter
Image Courtesy: ANI Twitter
Published on

புதுடெல்லி,

ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு 160 இந்தியர்களுடன் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று அதிகாலை 5 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com