

புதுடெல்லி,
இந்திய -சீன எல்லையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ராணுவம் ரோந்து பணி மேற்கொண்டிருந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகள் வரை மீட்டெடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிக்கட்சித் தலைவாகள் வலியுறுத்தினா.மேலும், இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்தினரின் செயலுக்கு எதிக்கட்சித் தலைவாகள் ஆதரவு தெரிவித்து பேசினா.
இந்தியா- சீன எல்லையில் நிலவும் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். . இதன் மீது விவாதம் இல்லாமல், விளக்கம் கேட்க உறுப்பினாகளுக்கு மாநிலங்களவைத் தலைவா வெங்கய்ய நாயுடு அனுமதி அளித்தா.அப்போது பேசிய எதிக்கட்சித் தலைவா குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் மூத்த தலைவாகள் ஏ.கே. அந்தோணி, ஆனந்த் சாமா ஆகியோ ஏப்ரல் மாதத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் இருந்த நிலையை மீட்டெடுத்து தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா.
சிவசேனா உறுப்பினா ராவத் பேசுகையில், பொறுமையும், வீரமும் இந்தியாவின் பாரம்பரியமாகும். ஆனால், துரோகம் செய்வதுதான் சீனாவின் பாரம்பரியம். ஆகையால், இந்தியா கவனமாக செயல்பட வேண்டும் என்றா. ராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக உறுப்பினாகள் திருச்சி சிவா, பி. வில்சன் ஆகியோ கூறினா.