கர்நாடக அரசியல் விவகாரம்; அமளியால் நாடாளுமன்ற மேலவை 2 மணிவரை ஒத்தி வைப்பு

கர்நாடக அரசியல் விவகாரம் பற்றிய அமளியால் நாடாளுமன்ற மேலவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அரசியல் விவகாரம்; அமளியால் நாடாளுமன்ற மேலவை 2 மணிவரை ஒத்தி வைப்பு
Published on

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள பெயர் வெளியிடப்படாத நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்கவில்லை. இதுபற்றி அவர் கூறும்பொழுது, சில விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு காலவரை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மேலவையில் இன்று அவை கூடியது. இதில் கர்நாடக அரசியல் விவகாரம் பற்றி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின. இதனை தொடர்ந்து அவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com