செப்.5-ல் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

வரும் 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், சாராய கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
செப்.5-ல் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி,

புதுச்சேரி, காரைக்கால் மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து, மதுபான கடைகள் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது.

மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com