சாமானிய மக்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் - சரத்பவார் கருத்து

சாமானிய மக்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் - சரத்பவார் கருத்து
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மீண்டும் நான் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜனநாயகத்தில், நாம் எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது. நீங்கள் வாக்காளர்களைத் துச்சமாக மதித்தால், வாக்காளர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சக்திவாய்ந்த, புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா, வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அர்த்தம், ஜனநாயக உரிமை அதாவது, அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள். அரசியல்வாதிகள் தங்களுடைய எல்லையை மீறிச் சென்றால், அவர்களுக்கு வாக்காளர்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com