புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சேவை இன்று இயங்காது

அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இன்று 28.05.2026 (வியாழக்கிழமை) அன்று "பக்ரீத் பண்டிகையை" முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com