சிக்கிம்: சுரங்கப்பாதை பணியின்போது நிலச்சரிவு - 27 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கிய 27 பேரை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்கிம்: சுரங்கப்பாதை பணியின்போது நிலச்சரிவு - 27 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
Published on

காங்டாங்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலம் நம்சி மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 27 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

விபத்து

சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தால் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 27 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கிய 27 பேரை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com