

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் மருத்துவர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் 420-மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர்
டெல்லியில் மட்டும் 100-மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 96 மருத்துவர்களும் உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.