

புதுடெல்லி,
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம்வரை 4 கோடியே 88 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைப்புரீதியான தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு பெருகி இருப்பதை இந்த தகவல் உணர்த்துவதாக கூறியுள்ளது.
இதே காலகட்டத்தில், இ.எஸ்.ஐ. எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் 5 கோடியே 93 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்ததாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.