நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடக்கம்?

பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடக்கம்?
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 -ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 -ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.மத்தியில் ஆளும் மோடி அரசு தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால்  மக்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதேபோல், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்  இடம் பெறும் ஜனாதிபதி உரையில் அரசின் சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை  இடம் பெறும் என்று தெரிகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com