

திருவனந்தபுரம்,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு விமானம் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதில் பயணித்த பாலக்காடு ஜம்ஷீர் என்ற பயணி விமானத்தின் அவசர கால கதவை திடீரென திறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள், விமான பணிக்குழுவினர் ஜம்ஷீரை தடுத்து நிறுத்தினர். பின்னர், விமானம் கொச்சியில் பத்திரமாக தரையிறங்கியதையடுத்து, பயணி ஜம்ஷீரை கைது செய்த பாதுகாப்புப்படையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.