பீகாரில் நிதிஷ் அரசுக்கு எதிராக போராட்டம்; சிராக் பஸ்வான், ஆதரவாளர்களுடன் கைது

பீகாரில் நிதிஷ்குமார் அரசை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய சிராக் பஸ்வான், ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.
பீகாரில் நிதிஷ் அரசுக்கு எதிராக போராட்டம்; சிராக் பஸ்வான், ஆதரவாளர்களுடன் கைது
Published on

நிதிஷ் அரசுக்கு எதிராக போராட்டம்

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த அரசு எல்லாவற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாகக்கூறி, இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் லோக்ஜனசக்தி கட்சித்தலைவர் சிராக் பஸ்வான், தனது ஆதரவாளர்களுடன் நேற்று போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து பேரணியாக சென்று மாநில கவர்னர் பாகுசவுகானை சந்தித்து நிதிஷ் குமார் அரசுக்கு எதிரான மனு அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.

சுற்றி வளைத்து கைது

இந்த போராட்டத்தின்போது சிராக் பஸ்வான் பேசும்போது, நிதிஷ்குமார் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், கல்வி, சுகாதாரம் என அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துள்ளது. எனவே அதை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பீகாரை காப்பாற்றுங்கள் என்ற கோஷங்கள் தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக புறப்பட்டனர். ஆனால் வழியில் வருமான வரித்துறை கமிஷனர் அலுவலகம் அருகே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விடுவிப்பு

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பீகார் மியூசியம் அருகே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் உடைக்க முயன்றனர். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தோம் என்றனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் பாட்னாவில் நேற்று பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com