சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பத்ராசால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Published on

மும்பை,

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர் சஞ்சய் ராவத். சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளரான இவர் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக கட்சியை உடைத்த போதும், அதிருப்தி அணியினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இந்தநிலையில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்டவிரோத பணத்தின் ஒருபகுதி சஞ்சய் ராத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் முடிவடைய இருந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு கோர்ட்டு சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 (வருகிற 19-ந் தேதி வரை) நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com