கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் பெட்ரோல், டீசல், மதுபானம் விலை உயரும்

கேரள சட்டசபை கூட்டத்தில் நேற்று 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் பெட்ரோல், டீசல், மதுபானம் விலை உயரும்
Published on

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபை கூட்டத்தில் நேற்று 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரூ.500 முதல் ரூ.999 வரையிலான இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது பானங்களின் விலை பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 அதிகரிக்கப்படும். ரூ.1,000-த்திற்கும் கூடுதலான மது பாட்டிலுக்கு ரூ.40 உயர்த்தப்படும். இதன்மூலம் ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும். பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.750 கோடி கூடுதலாக கிடைக்கும். புதிதாக வாங்கும் ரூ.2 லட்சம் வரை உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் பெட்ரோல், டீசல், மதுபானம், வாகனங்களின் விலை உயரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com