4 நோயாளிகளுக்கு நடத்தப்பட்டது பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிக்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் 4 நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4 நோயாளிகளுக்கு நடத்தப்பட்டது பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிக்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனாவால் குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும், அந்த பிளாஸ்மாவை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி குணப்படுத்தலாம் என்றும் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை, டெல்லியில் 4 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் முதல்கட்ட முடிவுகள் ஊக்கம் அளிப்பதாகவும், நோயாளிகளின் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அடுத்த 2 நாட்களுக்கு இதேபோன்று சிகிச்சை நடத்தப்படும். அதன்பிறகு எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்படும். இதற்காக, குணமடைந்தவர்கள், தங்கள் பிளாஸ்மாவை தானமாக தர வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com