பி.எம். கேர்ஸ் உதவி; 3,855 குழந்தைகள் தேர்வு

கொரோனாவால் ஆதரவை இழந்த 3,855 குழந்தைகள், பி.எம்.கேர்ஸ் குழந்தைகள் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பி.எம். கேர்ஸ் உதவி; 3,855 குழந்தைகள் தேர்வு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த பதிலில், கொரோனாவால் ஆதரவை இழந்த குழந்தைகளுக்காக, பி.எம். கேர்ஸ் குழந்தைகள் திட்டத்தை மத்திய அரசு துவக்கியது.

இத்திட்டத்தின் கீழ் ஆதரவு கேட்டு, 6,624 மனுக்கள் வந்தன.

இதில் 3,855 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மராட்டியத்திலிருந்து 1,158, உத்தர பிரதேசத்திலிருந்து 768, மத்திய பிரதேசத்திலிருந்து 739, தமிழகத்திலிருந்து 496 மனுக்கள் வந்தன என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com