

ஸ்ரீநகர்,
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை அவர் காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கொண்டாடுகிறார்.
இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மோடி வருவதாக பாதுகாப்பு துறையின் மேலிட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது, 2014-ம் ஆண்டில் இருந்து காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடும் 4-வது தீபாவளி ஆகும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு அவர் ரஜவுரி எல்லை பகுதியில் படையினருடன் தீபாவளி கொண்டாடினார்.