முடிசூட்டப்பட்ட மன்னர் சார்லஸ், ராணி கமிலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முடிசூட்டப்பட்ட மன்னர் சார்லஸ், ராணி கமிலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
Published on

லண்டன்,

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.

ராணியின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில் மே 6-ந் தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

அதன்படி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நேற்று இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் சார்லஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார். பேராயர், செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை மன்னர் சார்லசுக்கு அணிவித்தார்.

இந்த நிலையில் மன்னராக முடிசூட்டப்பட்ட மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு விழாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். வருகிற ஆண்டுகளில் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுப்பெறும் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com