குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி; வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி; வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

குடியரசு துணை தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர்.

வாக்கு பதிவிற்கான மொத்தமுள்ள 785 வாக்குகளில் 711 வாக்குகள் பதிவாகின.

இதில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஐ.யூ.எம்.எல். கட்சிகளின் தலா 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 8 எம்.பி.க்களும் வாக்களிக்கவில்லை. 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரதீய ஜனதா வேட்பாளர் வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com