பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார் - அமித் ஷா

பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக, தான் வாழ்த்துவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார் - அமித் ஷா
Published on

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நமது எதிரிகளை அழிப்பவர்களும், பாரதத்தின் கேடயமுமான நமது ஆயுதப் படைகளின் இணையற்ற வீரத்திற்கு நாடு வணக்கம் செலுத்துகிறது. நமது முதல் பாதுகாப்பு வரிசையான, பி.எஸ்.எப்.-ன் துணிச்சலான வீரர்களுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்.

நமது புகழ்பெற்ற வரலாற்றில் நமது படைகளின் துணிச்சல் என்றென்றும் பொறிக்கப்படும். நமது அப்பாவி சகோதரர்களின் மறைந்த ஆன்மாக்களுக்கு நீதி வழங்குவதில் பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக நான் வாழ்த்துகிறேன். பாரதத்தின் எந்த எதிரியும் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com