

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் லே பகுதிக்கு காரில் சென்று இறங்கியதும் அங்குள்ள உள்ளூர் மக்கள் தங்களது கலாசார முறைப்படி மேளம் முழங்க அவரை வரவேற்றனர்.
அவர்கள் பல வண்ண தொப்பிகளை அணிந்தபடி, கைகளில் பூங்கொத்துகளுடன் வரிசையில் காத்திருந்து பிரதமருக்கு வெண்ணிற சால்வைகளை பரிசாக வழங்கினர்.
இதன்பின்னர் பிரதமர் மோடி லே பகுதியில் உள்ள விமான நிலையத்தில் அமையவுள்ள புதிய முனையத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.