நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Image Courtesy: ANI 
Image Courtesy: ANI 
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை உலக தரத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி 'அம்ரித் பாரத்' ரெயில் நிலையங்கள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இதன்கீழ் முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட இருக்கின்றன. அதே நேரத்தில் இந்த ரெயில் நிலையங்கள் புதுப்பொலிவும் பெற போகின்றன.

அந்த வகையில் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 25 ரெயில் நிலையங்களும் இந்த திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் முதல் கட்டமாக செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கேணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரெயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய உள்ள பல்வேறு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com