கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது - பிரதமர் மோடி புகழாரம்

கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது - பிரதமர் மோடி புகழாரம்
Published on

டெல்லி,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவரது தொலைநோக்கு தலைமை பண்பு மற்றும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார். கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது. நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான காமராஜரின் லட்சியங்களை நிறைவேற்றும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com