ராணுவம் மேலும் இளமையாகும்: அக்னிபாத் வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேச்சு

இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
ராணுவம் மேலும் இளமையாகும்: அக்னிபாத் வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கெண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். ராணுவத்தில் இருந்து வெளியேறும் போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் பயிற்சியை தொடங்க உள்ளனர். இந்த வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com