

காந்திநகர்,
குஜராத் உயர்நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அஞ்சல் தலை ஒன்றையும் அவர் வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்றும் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.