அனந்தகுமார் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு: பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்

அனந்தகுமார் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்
அனந்தகுமார் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு: பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்
Published on

பெங்களூரு,

மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் (வயது 59) இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அனந்த குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். மத்திய இரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறகிறது. இதில் பிரதமர் மேடி கலந்துகெள்கிறார். இந்நிலையில், அனந்தகுமாரின் உடல் நாளை காலை 7 மணி வரை அவரது இல்லத்திலும், அதன் பின்னர் பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில் காலை 9 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதையடுத்து, பெதுமக்கள் அஞ்சலிக்காக காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை, பெங்களூருவில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் அவரது உடல் வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com