நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பது இனி நிறுத்தப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
Published on

,புதுடெல்லி,

பிரதமர் மேடி நாட்டின் அடிப்படை பெருளாதார பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"பிரதமர் மோடியின் அரசாங்கம் கேடிக்கணக்கான மக்களை வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை பேன்ற படுகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளது. தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டுக்காக நீங்கள் கூட்டம் நடத்தும் வேளையில் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் தேல்விகளின் பட்டியல் நீளமானது.

* வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.2 சதவீதமாக உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியமாக உள்ளது. 20-24 வயது வரை உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது, வேலைவாய்ப்பு சந்தையில் இளைஞர்களுக்கான நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.

* விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், 50 சதவீதம் எம்எஸ்பி பேன்றவை பெய்யாகிப்பேனது.

* 7 பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் அரசு வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. இது பட்டியல் மற்றும் பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பெருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான ஒதுக்கீடு இழப்புக்கு வழிவகுத்துள்ளது.

* கடந்த 2016-ம் ஆண்டு முதல் மேடி அரசு சிறிய அளவிலான பங்குகளை விற்ற 20 பெதுத்துறை நிறுவனங்களின் 1.25 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர். ஐக்கிய முற்பேக்கு கூட்டணி ஆட்சியில் 16.5 சதவீதமாக இருந்த உற்பத்திக்கான மெத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மேடி ஆட்சியில் 14.5 சதவீதமாக குறைந்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் தனியார் முதலீடும் கடுமையாக சரிவடைந்துள்ளது. மெத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் புதிய தனியார் முதலீடு திட்டங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில், ஏப்ரல் மற்றும் ஜூன் வரையிலான காலத்தில் 44,300 கேடியாக குறைந்துள்ளது. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு தனியார் முதலீடு ரூ.7.9 கேடியாக இருந்தது.

* ஊரக பகுதிகளில் ஊதிய உயர்வு விகிதம் எதிர்மறையாக உள்ளது. ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, கடந்த மே மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 6.3 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேடி அவர்களே. பத்து ஆண்டுகளாகி விட்டது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து அரசை விலக்கி வைக்க நீங்கள் உங்களின் விளம்பர யுக்தியை பயன்படுத்தினீர்கள். ஆனால் இனியும் இது வேலை செய்யாது. ஜூன் 2024-க்கு பின்னர் மக்கள் கணக்கு கேட்கத் தெடங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பது இனி நிறுத்தப்பட வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com