கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்


கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
x

சிகிச்சைக்குப்பின் 5 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியரின் மகன் ஆயூஷ் (வயது 25). இவரை கடந்த 13ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 6 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய எஞ்சிய 5 பேர் பலியா மாவட்டத்தின் அப்ஹன் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த குற்றவாளிகள் 5 பேரும் போலீசார் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கும் கால்களில் குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் 5 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story