பிரதமர் மோடி முன்னிலையில் கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்பு..!!

பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் விழாவில், கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

பனாஜி,

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கோவா மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

கோவா மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜனதா பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

காலை 11 மணியளவில், பனாஜி அருகே சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com