

புதுடெல்லி,
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி. தேசத்திற்காக தன்னலமின்றி அயராது பணியாற்றியுள்ளார். மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.