மராட்டியத்தில் வெயில் தாக்கத்துக்கு கர்ப்பிணி பலிஆஸ்பத்திரிக்கு 7 கி.மீ. நடந்து சென்றதால் விபரீதம்

குடும்பத்தினர் அவரை துண்டல்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துசென்றார்.
மராட்டியத்தில் வெயில் தாக்கத்துக்கு கர்ப்பிணி பலிஆஸ்பத்திரிக்கு 7 கி.மீ. நடந்து சென்றதால் விபரீதம்
Published on

மும்பை, 

மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டம் தகானு தாலுகா ஒசர் வீரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (வயது21). இவர் 9 மாத கர்ப்பிணி. இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார். அங்கு இருந்து ஆட்டோ மூலம் தவா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் ஆட்டோ மூலம் சிறிது தூரம் சென்று, 3 கி.மீ. நடந்து வீட்டுக்கு சென்றார். கொளுத்தும் கோடை வெயிலில் 7 கி.மீ. தூரம் நடந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

குடும்பத்தினர் அவரை துண்டல்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துசென்றார். கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அவரை காசாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். அங்கு இருந்து குடும்பத்தினர் கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் மூலம் காசா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

எனினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்தது.

சம்பவம் தொடர்பாக பால்கர் மாவட்ட அரசு டாக்டர் சஞ்சய் பாததே கூறுகையில், "பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளித்து உள்ளனர். எனினும் அவரின் உடல்நிலை மோசமானதால் வேறு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்து உள்ளனர். கர்ப்பிணி பெண் 7 கி.மீ. வெயிலில் நடந்து உள்ளார். இதனால் அவரின் உடல் மோசமாகி அவர் உயிரிழந்து உள்ளார். சம்பவம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விரிவான விசாரணை நடத்தினேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com