குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணிக்கு ஜனாதிபதியின் உரை ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் குடியரசு தினம் நாளை மறுநாள்(26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(நாளை) ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உரை ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணி முதல் ஒலிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ந்து ஆங்கில பதிப்பு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






