கடற்படை ஆய்வுக்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாகப்பட்டணம் வருகை

கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரிவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர் விசாகப்பட்டணம் வந்தார். தனது கடற்படை ஆய்வுப்பணிகளை இன்று அவர் மேற்கொள்கிறார்.
கடற்படை ஆய்வுக்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாகப்பட்டணம் வருகை
Published on

விசாகப்பட்டணம்,

முப்படைகளின் தலைமை தளபதி என்ற முறையில் ஒவ்வொரு ஜனாதிபதியும் தங்கள் 5 ஆண்டு பதவிக்காலத்தில் ஒருமுறை கடற்படை ஆய்வை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கடற்படை ஆய்வை மேற்கொள்ள உள்ளார்.

கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரிவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர் விசாகப்பட்டணம் வந்தார். தனது கடற்படை ஆய்வுப்பணிகளை இன்று (திங்கட்கிழமை) அவர் மேற்கொள்கிறார்.

இதில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், கடலோர காவல்படை கப்பல்கள் உள்பட பல்வேறு படைப்பிரிவுகளை அவர் ஆய்வு செய்கிறார். இதற்காக விசாகப்பட்டணம் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை, கடலோர காவல்படை கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ராவில் சென்று ராம்நாத் கோவிந்த் ஆய்வு செய்கிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 போர் விமானங்கள் வானில் பறந்து சாகசங்களையும் நிகழ்த்துகின்றன. கடற்படை ஆய்வு நிகழ்ச்சிக்காக 3 நாள் பயணமாக வந்துள்ள ஜனாதிபதியை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கவர்னர் ஹரிசரண், கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com