கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பு செயலாளர் அஜய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று காலை கண்புரை நீக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிவடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நலமுடன் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com