இளம்பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டிய மதபோதகர் கைது

வேலைக்கு வந்த இளம்பெண்ணை சஜி ஆபிரகாம் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இளம்பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டிய மதபோதகர் கைது
Published on

திருவனந்தபுரம்,

ஆலப்புழை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புனலூர் பகுதியை சேர்ந்தவர் சஜி ஆபிரகாம் (வயது 58). இவர் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரை பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் போதகராக உள்ளார். இந்த ஆலயத்தை ஒட்டியுள்ள வீட்டில் சஜி ஆபிரகாம் வசித்து வந்தார். இந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி வேலைக்கு வந்த இளம்பெண்ணை சஜி ஆபிரகாம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அவர் மிரட்டி உள்ளார். ஆனாலும் இளம்பெண் சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறினார். அவர் மாவேலிக்கரை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஆலப்புழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து போதகர் சஜி ஆபிரகாம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எர்ணாகுளத்தில் உள்ள கேரள ஐகோர்ட்டில் இளம்பெண் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 2 வாரத்திற்குள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆலப்புழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே போதகர் சஜி ஆபிரகாமை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com