ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
Published on

புதுடெல்லி,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் தலைமை பொறுப்பு வகிக்கும் இத்தாலி, நடப்பு ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டை இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடத்தி வருகிறது.

இத்தாலியின் அழைப்பின்பேரில், இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.   ஜி-7 மாநாட்டுக்கு இடையே, மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாட்டு தலைவர்களான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.ஜி 7 மாநாடு முடிந்த பிறகு இத்தாலியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.

ஜி 7 மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, "மாநாடு ஆக்கப்பூர்வமாக இருந்தது. தலைவர்களுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது. எதிர்கால தலைமுறையினருக்கான சிறந்த உலகத்தை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்தோம்" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com