பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் பயணம் - ரூ.1.06 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஜெய்ப்பூர் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் பயணம் - ரூ.1.06 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்றைய தினம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

ஜோத்பூர் விமான நிலையம்

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, ​​ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். 480 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ராஜஸ்தானின் பலோத்ராவில் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். இந்த திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்து, ரெயில்வே உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியுள்ளன.

பெட்ரோ கெமிக்கல் வளாகம்

நாட்டின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் ஒரு மைல்கல் சாதனையாக அமையும் வகையில், பலோத்ராவில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அமையவுள்ள ஜெய்ப்பூர் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

குஜராத்

அதோடும் ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வாகியுள்ள சுமார் 54 ஆயிரம் இளைஞர்களுக்கான பணி ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்க உள்ளார். ராஜஸ்தானில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, அடுத்ததாக பிரதமர் மோடி இன்று மாலை குஜராத் செல்ல உள்ளார். அங்குள்ள சனந்த் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செமிகண்டக்டர் அசெம்ப்ளி மற்றும் பரிசோதனை ஆலையை மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com