நாளை மறுநாள் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி


நாளை மறுநாள் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Sept 2025 11:58 AM IST (Updated: 7 Sept 2025 4:42 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்.9ம் தேதி பஞ்சாபில் இருந்தவாறு பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பேரிடரை சந்தித்துள்ளது. பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ளம் 1988 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வெள்ளம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

குறிப்பாக, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கன மழை, மற்றும் பொங், ரஞ்சித் சாகர், பாக்ரா ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகப்படியான நீர் ஆகியவை இந்த பேரிடருக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால், ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பஞ்சாபில் 1,400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 1. 48 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கின.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில்,

பிரதமர் நரேந்திர மோடி செப். 9 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூபிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்.9 இல் பஞ்சாபில் இருந்தவாறு பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story