அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி
Published on

கவுகாத்தி,

பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் (INDMAX) யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவில் மாகுமிலுள்ள ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் கம்ப்ரசர் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும் தேமாஜி பொறியியல் கல்லூரியைத் அவர் தொடங்கி வைத்தார். சுவல்குச்சி பொறியியல் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com