

புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில் யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உடல் நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்றிரவு அருண் ஜெட்லியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்திக்கிறார். மத்திய அமைச்சரவையில் தமக்கு இடம் தர வேண்டாம் என அருண்ஜெட்லி தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மோடி நேரில் சந்திக்கிறார்.