ஆந்திராவில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது: 10 பேர் பலியான சோகம்

ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது.
ஆந்திராவில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது:  10 பேர் பலியான சோகம்
Published on

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை . இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 10 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். 25-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பி உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com